நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தேவையான பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் புதுவை யூனியன் பிரதேசத்தில் பெண் ஊழியர்களுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் இரண்டு மணி நேரம் பணி சலுகை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் பூஜை போன்ற பாரம்பரிய காரியங்கள் இருப்பதால் இதற்காக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளான கல்வித்துறை, காவல்துறை,சுகாதாரத்துறை போன்றவற்றில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும் அனைவரும் பெண்களாக இருக்கும் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் பணி நேரம் சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக வழக்கமாக விடுமுறைக்கு அனுமதி வைக்கும் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி காலை 8.45 மணி முதல் காலை 10.45 மணி வரை இந்த பணிநேர சலுகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.