புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் CUET-PG நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 5 முதல் 20 வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று  (மே 5) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.