வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை அரசு அதிகாரிகளிடம் கூட சொல்லாமல் வேலூர் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு திடீரென்று சென்ற முதல்வர், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். இதன்பின், மாணவர்களுக்கு தனது கையாலேயே உப்புமா பரிமாறிய அவர், நல்லா சாப்பிட்டு படிங்க என கூறினார்.

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்திற்காக இரண்டுநாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடிக்கு சென்றபோது  முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, தனிச் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் ரயிலில் சென்றனர். இதில் இறையன்பு சாதாரண துணிப்பையில் கோப்புகளை எடுத்துக்கொண்டு மிக எளிமையாக பயணம் செய்தார்.