அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதம் அகவிலைப்படியை பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வானது நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதமானது மாதத்தின் இறுதியில் வெளியிடப்படும். இவற்றின் சராசரி அளவை கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

தற்போது தீபாவளி என பெரிய பண்டிகைகள் வருகின்றன. இந்த நிலையில்  இந்த நாளில் தற்போதைய அறிக்கைப்படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 46 சதவீதம் அதிகரிக்கப்படும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ஆம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பிக்மென்ட் காரணிகளை அடிப்படியாக வைத்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அரசு உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.