குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமான வரவேற்பு அளித்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமண வீட்டிற்கு வந்த அனைத்து சொந்த பந்தங்கள் முன்னிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரின் மாமியார் வாயில் சிகரெட்டை வைத்துள்ளார். பிறகு மாமனார் அதனை பற்ற வைப்பது போல பாவனை செய்கிறார். பிறகு அவர் சிகரெட்டை மணமகன் வாயிலிருந்து எடுத்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில் இனிப்பு வகைகளுக்கு பதிலாக பான் மசாலாவும் கொடுக்கப்பட்டிருந்தது. குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இப்படி ஒரு வழக்கத்தை பார்த்து பலரும் பலவிதமாக கமாண்ட் செய்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Joohi K Patel இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@joohiie)