டெல்லியில் வாஷிங் மிஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் கிடைத்துள்ளது. தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொண்டிருந்தபோது அவரின் குழந்தை வாஷிங் மெஷின் அருகே தாய் இல்லாத போது சேரில் ஏறி வாஷிங்மெஷினில் தவறி விழுந்தது. 15 நிமிடங்கள் சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மிஷினில் மூழ்கிக் கிடந்த குழந்தையை கண்டறிந்த தாய உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்தது. அதன் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட குழந்தை தனது தாயின் குரலை உணர்ந்து மீண்டும் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 19ஆவது நாளில் இன்று குழந்தை உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.