செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் செலவினை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை அலுவலகங்களை ட்விட்டர் நிறுவனம் மூட முடிவு செய்து உள்ளது. இந்தியாவில் பெங்களூரு அலுவலகம் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட இரண்டு ட்விட்டர் அலுவலகத்தின் ஊழியர்களும் அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.