மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. இந்தநிலையில், சென்னைக்கு அருகே இருந்த புயல் தற்போது நெல்லூர் – மசூலிப்பட்டிணம் அருகே நிலை கொண்டு உள்ளது. தற்போது சென்னையில் பெய்தது போலவே நெல்லூரிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர் முதல் பிரகாசம் வரை பல இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும் வேளையில் கனமழை பெய்யும் என்பதால் மத்திய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.