பொது மக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கிறது. எனவே உங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்து பெரிய அளவில் வருமானத்தை பெற வேண்டும் என்று விரும்பினால் அதற்கு நல்ல ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டம் தான் நிலையான வைப்பு நிதி திட்டம்.

இந்த திட்டம் விரைவில் உங்களை பணக்காரர் ஆக்கிவிடும். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் இழப்பு உங்களுக்கு தான். ஏனென்றால் இது போன்ற சலுகைகள் மீண்டும் கிடைப்பதில்லை. இதில் ஏழு முதல் 45 நாட்கள் முதலீடு செய்தல் மூன்று சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கும். இதனோடு 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதலீடு செய்தால் 5.25 சதவீதம் வட்டி கிடைக்கும். அதே போல 211 நாட்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு 5.75% வட்டி கிடைக்கும். மூத்தகுடி மக்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் ஐந்து லட்சத்தை முதலீடு செய்தால் 10 வருடங்களில் வட்டியானது கணிசமாக அதிகரித்து 7.5% வட்டியோடு 10 லட்சத்து 51,175 திரும்ப கிடைக்கும். எனவே உடனடியாக இந்த திட்டத்தில் இணைந்து அதிக வருமானம் பெறலாம்.