சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சத்யா மறுத்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சத்யா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னுடைய தோழியோடு காத்திருந்தபோது அங்கு வந்த சதீஸ் சத்யாவை தண்டவாளத்தின் தள்ளிவிட்டதில் உயிரிழந்தார்.

மகள் இறந்த சோகம் தாங்காமல் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகள் மற்றும் கணவனை இழந்து புற்றுநோயுடன் போராடிவந்த ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த குடும்பம் மொத்தமும் ஒரே ஆண்டில் காணாமல் போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.