ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இறுதிக்கட்ட பரப்புரையாக நேற்று சீமான் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கீழே இருந்த ஒரு நபர் சீமானை நோக்கி ஐ லவ் யூ எனக் கூறினார். அப்போது சீமான் சற்றும் யோசிக்காமல் “மீ டு மீ டு” என கூறினார். இது அங்கே கூடியிருந்த மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.