தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மார்ச் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.