சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ மக்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அறிக்கை மே மாதம் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.