பாம்புகளைப் பார்த்தாலே பலர் அலறி ஓடி விடுவார்கள். ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று, மக்களைப் பயமுறுத்தியதோடு சிரிக்கவும் வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி நாற்காலியில் மிகவும் சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே ஒரு பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது.
ஆரம்பத்தில், வீடியோ எடுக்கும் பெண்ணுக்கும் அது அசைவில்லாமல் இருந்ததால், அது ஒரு போலிப் பாம்பு என்றுதான் தோன்றுகிறது. ஆனால், திடீரென அந்தப் பாம்பு நகரத் தொடங்கியபோது, வீடியோ எடுக்கும் பெண் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அதன் பிறகு அவர், நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பாம்பு குறித்துச் சொல்ல, அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது.
I thought this was the usual prank with a fake snake, then it started moving 😳 pic.twitter.com/33fGxjoprw
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 10, 2025
அவர் அமைதியாக நாற்காலியில் இருந்து எழுந்து, மெதுவாக அங்கிருந்து ஓடி, தொலைவில் சென்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். இந்த வேடிக்கையான வீடியோ ‘X’ தளத்தில் பகிரப்பட்டு, இதுவரை 6 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பலர், “அந்தப் பெண்ணின் ரியாக்ஷன் மிகவும் வேடிக்கையாக இருந்தது” என்று கூறியதுடன், சிலர், “அது கொம்பு பாம்பு (Corn Snake), அது விஷமற்றது; அதைத் துன்புறுத்த வேண்டாம்” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
