ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி  அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய DA நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ள ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது.

அதாவது பழைய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையானது மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படாது என அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.