விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆண் உருவ சூடுமன் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் தலை அலங்காரமும், உதட்டு சிரிப்பும், கயல் வடிவில் அமைந்த கண்களும், புருவங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொம்மையின் வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 12 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2,452 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்விற்கு இணையாக பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.