அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 2, 9,16, 23 , மார்ச் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. பின்னர் மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 5, 12 ,19, 26, மார்ச் 5 ,12, 19 , 26 , ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.