அகமதாபாத் மற்றும் திருச்சி வாராந்திர சிறப்பு ரயில்கள் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அகமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மூன்றாவது நாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும் வாராந்திர சிறப்பு முறையில் செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத்திற்கு அடுத்த நாள் இரவு 9.15 மணிக்கு சென்றடையும் திருச்சி சிறப்பு ரயில் செப்டம்பர் 10, 17, 24 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.