நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு சென்ற 2021-ம் வருடம் டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மையை சரிபார்க்கும் பிரிவு ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என கண்டுபிடித்து உள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும் தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத் தன்மையை இப்பிரிவு பரிசோதிக்கிறது என்று அவர் கூறினார்.