புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை நேதாஜி நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார்(26) பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தினேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் தினேஷ்குமார் சடலமாக மிதந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.