பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆகாஷ் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி முதல் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த ஆகாஷை செந்தில்குமார் கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.