மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் 55 கிலோ எடை பிரிவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து பயிற்சி இடைவெளியின் போது ஹரிஹரன் பிரட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஹரிஹரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.