கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பாளையம் மரிக்கொழுந்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரிக்கொழுந்து தஞ்சாவூரை சேர்ந்த தாவுதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தாவுதியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தாவுதியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.