ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணா நகர் களியங்காட்டு தோட்டத்தில் விவசாய குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(26) திருப்பூரில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பவித்ராவிற்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். ஆனால் பவித்ரா தனக்கு திருமணம் வேண்டாம் என கூறினார்.

இந்நிலையில் பவித்ராவின் பெற்றோர் அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.