திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் தங்க சுப்பிரமணியன்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நெல்லை சந்திப்பிலிருந்து சிவந்திப்பட்டிக்கு தங்க சுப்பிரமணியன் பேருந்தை ஓட்டி சென்றார்.

இந்நிலையில் சிவந்தி பட்டியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது சுப்பிரமணியன்(45) என்பவர் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரான சுடலைமணி(23) ஆகியோரிடம் தகராறு செய்தார். மேலும் சுப்பிரமணியன் பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டரை கம்பால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.