தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வ.உ.சி நகர் நான்காவது தெருவில் பவதாரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கிஷோர் என்ற வாலிபரை காதலித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த பவதாரணி திடீரென மாயமானார்.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது கிஷோர் பவதாரணியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பவதாரணையின் தந்தை பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிஷோரையும், பவதாரணியையும் தேடி வருகின்றனர்.