மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்கு உட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கேற்றார்.

சந்தன பில்கேட்ஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் பங்கு பெற மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.