கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில்  ஸ்ரீநிதி (21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீநிதி திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஸ்ரீநிதியை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். அந்த புகாரில் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த இன்பசேகரன் என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.