விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரன், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.