ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சூரிய பிரசாத்தின் பெற்றோருடன் புதுமண தம்பதியினரை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.