கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான ரெதீஷ் குமார் வேலை கிடைக்காமல் குருத்தங்கோட்டில் இருக்கும் வலை கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலையை விட்டு நின்று விட்டார்.

இந்நிலையில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் ரெதீஷ் குமாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் ராதா கடைக்கு சென்ற நேரத்தில் ரெதீஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.