கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக கிடைக்காததாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனீஷ் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் தனீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.