திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பரசுராமன் என்பவர் மணல், ஜல்லி விற்பனை செய்யும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபிஷ்குமார்(22), மணிகண்டன்(20) என்ற இரண்டு மகன்களும், நித்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் அபிஷ்குமாரும் நிலக்கோட்டையில் இருந்து செங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டார். அபிஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.