கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையத்தில் புகழ் பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவில் ஊழியர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்த்தபோது 3 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.