நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆணடுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 27-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என கூறியுள்ளார்.