நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலை கொட்டி தீர்க்கிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டேரி பூங்கா, மரப்பாலம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகளை தொந்தரவு செய்யாமல் மலைப்பாதையில் கவனமாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.