ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தங்கச்சிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுற்றுலா பேருந்தை ஓட்டி வந்த பரமத்திவேலூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.