சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் 48 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய லாரி டிரைவர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய மர்ம நபர் 10 லட்ச ரூபாய் கடன் வேண்டும் என்றால் அதற்கான ஜி.எஸ்.டி, செயலாக்க கட்டணம் உள்ளிட்ட பல பரிவர்த்தனைகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதனை நம்பி லாரி டிரைவர் சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவர் லாரி டிரைவரை தொடர்பு கொள்ளவில்லை. இதுகுறித்து லாரி டிரைவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.