புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.