திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண்டனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆண்டனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.