கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த வேனில் பயணம் செய்த 10 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.