திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் ஹரிகிருஷ்ணன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி டெம்போவில் தென்மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் அங்கு சென்று ஹாரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.