காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக 6,750 வழங்குதல், பணியிடங்களுக்கு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிடுதல், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனை அடுத்து காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மயில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஓய்வு பெற்ற பணியாளர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.