தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரியூர் பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சென்றாயன் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனை தட்டி கேட்ட இளம் பெண்ணையும், அவரது தாயையும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சென்றாயனை கைது செய்தனர். தலைமறைவான சென்னப்பன் என்பவரை தேடி வருகின்றனர்.