தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ. துரிஞ்சிபட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.