கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை பெற்றோரிடம் தெரிவித்தால் படிக்க விட மாட்டார்கள் என்ற அச்சத்தில் மாணவி யாரிடமும் இது பற்றி கூறாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து கார்த்திகேயன் அடிக்கடி மாணவியை பின்தொடர்ந்து தொந்தரவளித்து, காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.