தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் மெக்கானிக்கான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திக்கை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.