அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் சுசில் ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சுசில் ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்