கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் ஊராட்சி பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார்(20) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மதன் குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் அத்தை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மதன்குமாரை கைது செய்தனர்.