சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 3 மற்றும் வை ராஜா வை போன்ற 2 படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். ‌ இந்த படத்தில் விக்ரம் மற்றும் விஷ்ணு விஷால் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யா அடிக்கடி கோவில்களுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கோவிலில் சூட்டிங் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவை பார்த்த விஷ்ணு விஷால் என்னை ஏமாத்திட்டீங்க. என்னுடன் இருக்கும் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே படப்பிடிப்பில் பிரச்சனை என்றும் விக்ராந்த் தான்  விஷ்ணு விஷாலை சமாதானப்படுத்தி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது விஷ்ணு விஷால் உரிமையோடு ஐஸ்வர்யாவிடம் என்னுடைய புகைப்படம் எங்கே என்று கேட்டிருக்கிறார். இதனால் ஐஸ்வர்யா மற்றும் விஷ்ணு விஷால் இடையே எந்த பிரச்சினையும் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.